சிறுவனின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி இளைஞன் செய்த கொடூர செயல்.! தொடரும் இனவெறி தாக்குதல்கள்..!!
வெள்ளையின சிறுவனின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய இசையா ஜாக்சன் என்ற இளைஞரை பொலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் துன்புறுத்தப் படுவது, கொலை செய்யப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது,
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இசையா ஜாக்சன் ஜார்ஜ் ஃபிலாய்டின் விடயத்தை கேலி செய்யும் விதமாக வெள்ளையின சிறுவன் ஒருவனின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல் புகைப்படம் எடுத்து ” இப்போது போராடுங்களேன் ***” என கெட்ட வார்த்தையுடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்து போனதுடன் உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த பொலீஸார் ஜாக்சனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.