19 வருடங்களின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கும் முன்னணி ஹீரோயின்..! இப்ப எப்படி இருக்காங்க என்று நீங்களே பாருங்கள்…!!
90களின் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டு திடீரென காணாமல் போனவர் நடிகை இஷா கோபிகர். காதல் கவிதை திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே, நரசிம்மா, போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அத்துடன் ஹிந்தி தெலுங்கு மலையாளம், போன்ற மொழி திரைப்படங்களில் பிஸியானார். அதன் பின் தமிழ் திரைப்படங்களுக்கு நோ சொன்ன அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் திருமண வாழ்க்கை அவர் நினைத்தது போல் அமையவில்லை, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். சுமார் 19 வருடத்தின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க போகிறார்..! திரைப்படத்தில் இஷா கோபிகார் ஒப்பந்தமாகி உள்ளதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.!