அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் பிரபல நடிகை ஈஸ்வரி மற்றும் அவரது காதலன் இருவரும் விபத்தில் சிக்கி மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
பிரபல ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வரி தேஷ்பாண்டே சுபம் டெட்ஜ் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டு சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈஸ்வரி தேஷ்பாண்டே தனது காதலருடன் கோவா நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது அர்போரா என்ற கிராமத்தின் அருகே உள்ள பாதையில் வேக கட்டுப் பாட்டை இழந்த கார் அங்குள்ள சிற்றோடை ஒன்றில் கவிழ்ந்துள்ளது, காரில் காதலனுடன் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே இருந்த நிலையில் கார் நீரில் மூழ்கியுள்ளது,
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின் ஈஸ்வரி மற்றும் காதலனின் சடலங்களை மீட்டுள்ளனர். திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களின் மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் அதிக வேகம் என கூறப்படுகின்றது.!!