யாழ் இளைஞன் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு…!!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார். இந்த இளைஞனின் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
மேலும் இந்த யாழ்ப்பாண இளைஞனின் மர்ம மரணம் தொடர்பாக அவுஸ்ரேலியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.