வெள்ள நீரில் தத்தளித்த குழந்தைகளை உயிரை பணயம் வைத்து தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர். மனமிருந்தால் நீங்களும் பாராட்டலாமே..!!
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை வெறும் எழுத்தில் மட்டும் காட்டாமல் செயலிலும் நிரூபித்த கான்ஸ்டபிள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நாட்டில் பல மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. நீர்மட்டம் அதிகரித்து கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது.
இது வரை வெள்ளத்தினால் 136 பேர் வரை மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மீட்பு படையினர் ஏராளமானவர்கள் குறித்த பகுதிகளில் குவிக்கப் பட்டுள்ளதுடன் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அப்படி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தான் பிருத்விராஜ்சிங் ஜடேஜா.
!Advert!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை இடுப்பளவு நீரில் தனது உயிரையும் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். நீண்ட தூரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துவிட்ட நிலையில் படகுகள் எதுவுமே அங்கு இருக்கவில்லை. ஒரு குழந்தையை விட்டுவிட்டு இன்னொரு குழந்தையை மட்டும் கரை சேர்க்க முடியாது.
!Advert!
அதனால் இரண்டு குழந்தைகளையும் தன் தோளில் சுமந்த படி எதிர் திசைக்கு இழுக்கும் நீரில் இருந்து குழந்தைகளை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். இந்த காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் அது வைரலாகி மாநில முதல்வர் வரை சென்றுள்ளது. இதனை மாநில முதல்வர் விஜய் ரூபானி பாராட்டியுள்ளார்.அதே போல் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் காவலர் ஜடேஜா வை பாராட்டி வருகின்றனர்..!!
A man in uniform on duty…!!
Police constable Shri Pruthvirajsinh Jadeja is one of the many examples of Hard work , Determination and Dedication of Government official, executing duties in the adverse situation.
Do appreciate their commitment… pic.twitter.com/ksGIe0xDFk
— Vijay Rupani (@vijayrupanibjp) August 10, 2019