20 வயது யாழ் பல்கலைக்கழக மாணவருடன் தகாத உறவு..! கனடாவில் இருந்து இலங்கை வந்த 41 வயது பெண் தலைமறைவு!!
பேஸ்புக் காதலினால் இரண்டு பிள்ளைகளை கணவருடன் கனடாவில் விட்டு விட்டு யாழ் பல்கலைக்கழக மாணவருடன் 41 வயது பெண் ஒருவர் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த குறித்த பெண் நல்லூர் திருவிழாவிற்கு செல்ல வேண்டுமென கணவரிடம் கூறியுள்ளார்.
மனைவியின் அக்கா யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையில் அக்கா வீட்டில் தங்கி நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு இரண்டு வாரங்களுக்கு முன்பு மனைவியை அனுப்பி வைத்துள்ளார் கணவர். ஆனால் இலங்கை சென்ற பின் மனைவியின் எந்த தொடர்பும் கிடைக்காததால் அவரது அக்காவிற்கு கால் செய்து மனைவி பற்றி கேட்டுள்ளார்.
ஆனால் தங்கை வீட்டிற்கு வரவில்லை என கூறி அக்கா பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தன்னை அக்கா தேடுவதை அறிந்து அக்காவிற்கு கால் செய்த பெண் தன் கணவரின் கொடுமை தாங்க முடியாததால் வந்து மறைந்து இருகிறேன், சீக்கிரம் வீட்டிற்கு வருகிறேன் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக தங்கையின் கணவருக்கு அறிவித்த பெண் தங்கை மீதான பொலீஸ் முறைப்பாட்டையும் நீக்கி உள்ளார். திடீரென மனைவிக்கு என்னானது என தேடிய கணவர் அதிர்ந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பிரிவில் பிரிவு 3ம் ஆண்டு மாணவர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக் மனைவி இலங்கை வந்தது தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞருடன் பேஸ்புக்கில் சாட் செய்த பெண் பின் தனது அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளது தெரிய வந்துள்ள நிலையில் கணவர் கனடாவில் இருந்து இலங்கை வந்து பொலீசில் ஆதாரத்துடன் மனைவியின் தகாத உறவை வெளிப்படுத்தி விட்டு கனடா சென்றுள்ளார்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.