பல்கலைக்கழக மாணவிகளை வேட்டையாட நினைத்த வெறி பிடித்த 6 சீனியர் மிருகங்கள்..! மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் இவர்களா.!?
யாழ் பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களால் தகாத முறையில் நடத்தப் பட்ட முதலாம் ஆண்டு மாணவிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் ஒட்டுமொத்த இலங்கையின் பார்வையும் யாழ் பல்கலைக்கழகத்தின் மீது விழுந்துள்ளது. யாழ் பல்கலைக்கழத்தில் தொழில்நுட்ப பிரிவில் இறுதி ஆண்டு மாணவர்கள் வாட்சப் குரூப் ஓபன் செய்ததுடன் அதில் முதலாம் ஆண்டு மாணவிகளை இணைத்துள்ளனர்.
பின் ராகிங் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் பின் நிர்வாணமாக புகைப்படங்கள் அனுப்ப கூறியதுடன் குளிக்கும் போது வாட்சப் வீடியோ கால் எடுக்கும் படி கட்டாய படுத்தியுள்ளனர்.
இலங்கை கல்வித் திட்டதிற்கு அமைய சுமார் 13 வருடங்கள் போராடி அதன் பின் கிடைக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தில் பல மாணவிகள் பயத்தில் நடுங்கி உள்ளதுடன் சிலர் காம வெறி பிடித்தவரளின் சொல்லுக்கு கண்ணீருடன் தலையசைத்துள்ளனர். அண்மையில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக கண்டதால் காப்பாற்றிய தந்தை வைத்தியசாலையில் மகளை அனுமதித்ததுடன் அதற்கான காரணத்தை கேட்ட போது மகள் தனது தொலை பேசியை காட்டியுள்ளார். அதில் குறித்த 4 இளைஞர்களும் ஆபாசமாக பேசியவை பகிர்ந்தவை அனைத்தும் இருந்துள்ளது. தந்தை உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்ததுடன்,
சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து இந்த விடயம் வைரலாகி உள்ளது. கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த ஏராளமான மாணவர்கள் தற்கொலஒ செய்துகொண்டனர். இதற்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது இதனால் தான் தற்கொலைகள் இடம்பெற்று இருக்கிறது என பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்..!!