இசை குயில் ஜானகி அம்மா பற்றிய சிறிய தொகுப்பொன்றை இன்று பார்க்கலாம். 1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் ஆண்டு ஆந்திரா பிரதேஷில் ஸ்ரீராமமூர்த்தி சத்தியவதி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் தான் ஜானகி அம்மா. பள்ளிச் காலத்தில் படிப்பு துளியளவும் ஜானவி அம்மாவிற்கு வரவில்லை.
பெற்றோர் படி படி என பலமுறை கூறி பார்த்தனர் இவருக்கு படிப்பு தலைக்குள் போகவே இல்லை அதனால் சரி உன்னை நாங்கள் தொல்லை செய்யவில்லை என விட்டுவிட்டனர்.
படிப்பு தான் ஜானகி அம்மாவிற்கு எதிரி இசை இல்லையே..இசை இது தான் ஜானகி அம்மாவின் வாழ்வில் மிகப் பெரிய ஒளியானது.
20 வயதில் திரை துறையில் கால் பதித்த ஜானகி அம்மா 2017 ம் ஆண்டு இனி பாடப் போவதில்லை என அறிவித்து ரசிகர்களின் தலையில் இடியை இறக்கினார் என்றே சொல்ல வேண்டும். இன்றளவும் இவரது குரலுக்கு பலரும் அடிமை.
ஒரே நாளில் 15 பாடல்களை முடித்துக் கொடுத்த ஒரே பாடகி. தமிழ், ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் பாடி விருதுகளை அள்ளிக் குவித்தவர். ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை அறிய கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்..!