” பொலீஸாரிடம் இருந்து காப்பாற்றுங்கள், என் அண்ணாவிற்கு நீதி வேண்டும் ” கண்ணீருடன் ஜனனி வெளியிட்ட வீடியோ…!!
சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்தது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. தந்தையை கைது செய்து அடித்து உதைத்து அழைத்துச் சென்ற போது ஏன் அடித்தீர்கள் என கேட்ட மகனையும் மோசமாக தாக்கி பொலீஸார் சிறையில் அடைத்த நிலையில் இருவரும் மரணமடைந்திருந்தனர்.
இவர்களின் மரணத்திற்கு பொலீஸார் மற்றும் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கிய நீதிபதி என அனைவரின் மீதும் விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட பிரபலங்களும் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான ஜனனி தயவு செய்து பொலிஸாரிடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள். இதே போல் என் அண்ணாவிற்கும் நிகழ்ந்தது. தற்போது இந்த அண்ணாவிற்கும் நடக்கிறது தயவு செய்து என் அண்ணாக்களுக்கு நீதி வேண்டும்.
சட்டத்தை சாக்கடையாக மாற்ற வேண்டாம் என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..!