எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரில் மீண்டும் மாற்றமா??
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் தகுந்த வேட்பாளர் என்று இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ பெயரை குறிப்பிடடாலும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடன் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியில் அது மாற்றமடைய கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயாக்க குறிப்பிட்டுள்ளார்.
!Advert!
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரை கூறியது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் ஒருவரை பெயரிடும் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்வது தொடர்பில் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
!Advert!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் எங்கள் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் தீர்மானிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.