எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்கின்றாரா???
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே பகிரங்கமாக அறிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்று சந்திப்பில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வருவார். அதில் இந்தவொரு மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளரை சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களது முழு ஆதரவையும் வழங்குவோம்
இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறான ஒரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிய ஒரு நிலை உருவாகியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் இது போன்ற சவால்கள் உள்ள நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.