வாட்டிவரும் வெயிலால் 44 பேர் பலி! ஜப்பானை வஞ்சம் தீர்க்கும் இயற்கை!
ஜப்பானின் பல பிரதேசங்களில் வீசி வருகின்ற கொடுமையான அனல் காற்றின் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்க முன்பு வரை ஜப்பானின் ஒரு பகுதியல் மழை வெள்ளத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள் பெருங்கஸ்டத்திற்கு உள்ளான நிலையில் தற்போது அனல்வெயில் ஜப்பானை வாட்டி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
ஜப்பான் நாட்டில் ஏற்படும் சராசரி வெப்பநிலையை விட 12 டிகிரி செல்சியஸ் கூடுதலாக தற்போது வெயில் வீசி வருகிறது. எரியும் வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள போதுமான உபகரணங்களை பயன்படுத்தகொள்ள வேண்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.
ஜப்பானின் கிழக்கப் பகுதிகளில் ஜூலை 9-ஆம் தேதியிலிருந்து தற்போது வரை வெயிலுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த சனிக்கிழமை மட்டும் மத்திய டோக்கியோ பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்ததால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் முன்புபோல் எப்போதும் இல்லாத அளவிற்கு குமாகயா பகுதியில் 41 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.