ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு முழு காரணம் இவர் தான்..! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் பரபரப்பு..!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து வருடங்கள் கடந்த பின்பும் அவரது மரணத்தின் மர்மம் இன்னும் விலகவில்லை. பலர் பல விதமான கருத்துகளை கூறி வரும் நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் இன்னுமொரு பிரச்சனையை ஆரம்பித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் முத்தமிழ் சொல்வனை ஆதரித்து பழனிச்சாமி அவர்கள் தேர்தல் மேடையில் பேசினார் அதன் போது…
ஜெயலலிதா அம்மாவின் மரணம் மர்மம் என்று அதனை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசி வருகின்றார். ஆனால் ஜெயலலிதா அம்மாவின் மரணத்திற்கு முழு காரணமும் மு. கருணாநிதி அவர்களும் ஸ்டாலின் அவர்களும் தான்.
அம்மா நோயுற்று இருந்த நேரம் அம்மா மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரது நிம்மதியை பறித்தார்கள். வழக்கு தள்ளுபடி ஆன போதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவரை மனதளவில் பாதிக்க வைத்தார்கள் அத்துடன் ஜெயா அம்மாவால் சரியான முறையில் சிகிச்சை பெற முடியவில்லை.
அம்மாவின் மரணத்திற்கு மு.கருணாநிதி அவர்களும் ஸ்டாலின் தான் காரணம். தங்கள் தவரை மறைத்து இறந்து போன அம்மாவிற்கு நீதி கேட்பதாக கூறி அம்மாவின் பேரால் வாக்கு பிச்சை கேட்கிறார்கள் என முழங்கியுள்ளார். தேர்தல் ஆரம்பித்தால் இறந்தவர்களை கூட இவர்கள் விட மாட்டார்கள் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.