தன்னை அடைய நினைத்த சரவணபவன் ஓனர் ராஜ்கோபாலின் மரணத்தை ரசித்த ஜீவஜோதி இத்தனை மோசமானவரா.!? இரண்டாவது கணவருடன் சேர்ந்து செய்த கேவலமான விடயம்..!!
மரணமடைந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தவர் ஜீவஜோதி.. சரவண பவன் ஹோட்டலில் பல வருடங்களாக மேலாளராக பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதியை அடைய நினைத்த ராஜகோபால் ஜீவஜோதியின் காதல் கணவரான. பிரின்ஸ் சாந்தகுமாரை கூடி படை வைத்து கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கை விஷேடமாக விசாரித்து நீதி கட்டாயம் கிடைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கட்டளையை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப் பட்டது. இதில் ராஜகோபால் தான் கொலையாளி என உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சிறைக்கு அனுப்பாமல் வைத்தியசாலை அனுப்பப் பட்டார்.
அதன் போது வைத்தியசாலையில் கடந்த ஜூலை 18ம் திகதி மரணமடைந்தார். ஜீவஜோதியின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததாக அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் ஜீவஜோதி அத்தனை நல்லவர் இல்லை என்பது தற்போது பரபரப்பாகி வருகிறது.
தன் காதல் கணவரின் மறைவிற்கு பின் தண்டபாணி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜீவஜோதி தனது சொத்துகளை நாகப்பட்டினத்தை சேர்ந்த எஸ் வேதராசு என்பவரிடம் அடைமானம் வைத்துள்ளார். ஆனால் சொத்துகளை பணம் கொடுத்து மீட்காமல் வேதராசு வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று மிரட்டி எடுத்து வந்துள்ளனர்.இது தொடர்பாக வேதராசு பொலீஸில் புகார் கொடுத்தார்.
அதற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மனைவி இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். ஆனால் இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில் இவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வேதராசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று குறித்த வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
இதன் போது ஜீவஜோதி மற்றும் தண்டபாணி வழக்கை வாபஸ் பெறும் படி மிரட்டியதாக பொலீஸில் புகார் கொடுக்கப் பொலீஸார் கூறிய நிலையில் .. இந்த விசாரணை வரும் 11ம் திகதிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..!!