“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” பாடலின் மூலம் அனைவரையும் கவர்ந்த பிரபல நடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.!? இதோ கணவர் குழந்தையுடன் வைரலாகும் புகைப்படம்..!!
ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி உட்பட பல மொழிகளில் அசத்திய நடிகை ஜெயா சீல் தமிழில் பெண்ணின் மனதை தொட்டு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்த ஜெயா சீல் “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” பாடலின் மூலம் இளைஞர்களின் கனவுக்குள் வந்தார். அதன் பின் கலகலப்பு, திரைப்படத்தில் நடித்த ஜெயா விக்ரமுடன் சாமுராய் திரைப்படத்தில் ஜோடியானார்.
அதன் பின் இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்த போதும் ஹிந்தி, தெலுங்கு என சென்றார். அதன் பின் தபேலா கலைஞரான பிக்ரம் கோஷை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் ஆங்கில படம் மற்றும் சில பெங்காலி திரைப்படங்களில் நடித்த ஜெயா தற்போது ஆண் குழந்தைகள் இருவரை கவனித்துக் கொள்வதையே வேலையாக வைத்திருக்கின்றாராம்.
திரைபடங்களுக்கு நோ சொல்லும் ஜெயாவின் கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகு அப்படியே இருக்கிறது என கூறி வருகின்றனர்..!!