அமெரிக்காவில் Johnson & Johnson குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் இருப்பதாக விசாரணை..!!
அமெரிக்காவில் Johnson & Johnson குழந்தைகளுக்கான பவுடரால் (powder) புற்றுநோய் இருக்கலாம் என நிறுவனம் பொய் கூறியதா என்பது பற்றி குற்றவியல் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் இது தொடர்பாக அமெரிக்கா அமெரிக்க நீதிப் பிரிவு நடுவர் குழுவை உருவாக்குவதாக Bloomberg குறிப்பிட்டுள்ளது.
மேலும் உடலில் புற்றுநோய் இருக்கக்கூடிய பொருள்கள் உள்ளதா என்பது பற்றி Johnson & Johnson அதிகாரிகளுக்கு முன்பே தெரியுமா என்று நடுவர் குழு நிறுவனத்தின் ஆவணங்களை தேடிவருகிறது.
இந்த விசாரணை தொடர்பில் அழைப்பாணைகளைப் பெற்றுள்ளதாக மட்டும் கூறிய Johnson & Johnson மேல் விவரங்கள் அளிக்கவில்லை.மேலும் இந்த விசாரணை பற்றி நிறுவனம் எந்தவொரு கருத்தையும் வெளியிட மறுத்துள்ளது.