இந்த 5 ராசிக்காரர்கள் உங்கள் காதலனாகவோ /காதலியாகவோ கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!! யார் அந்த அதிர்ஷ்சாலி ராசிக்காரர்கள் என்று பார்ப்போம் வாங்க!
உலகில் பல பிரச்சினைகள் வெடித்தாலும் இந்த உலகம் அழியாமல் இருக்க காரணம் காதல் மட்டும் தான் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. வாழ்வின் கோடான கோடி அழகே காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான். காதல் என்பது கண் மூடித்தனமாகவோ அல்லது உடல் ஈர்ப்பு காரணமாகவோ தோன்றுவதாக இருக்கக்கூடாது.உலகில் எந்தவொரு சக்தியாலும் காதலை பிரிக்க கூடாது. இந்த உலகில் அன்பைக் கொண்டு எது வேணும் எண்டாலும் சாதிக்க முடியும். அன்பை அடிப்படையாக கொண்டு அதன் பிரதி விம்பமாக திகழ்வது தான் காதலாகும். காதல் மட்டும் தான் புயநலம் இன்றி உங்கள் வாழ்வில் உண்மையான அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.
அந்த வகையில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது செலுத்தும் அன்பிற்கு அளவே இருக்காது. மற்ற ராசிக்காரர்கள் அன்பு செலுத்த மாட்டார்கள் என்பது இதன் பொருள் அல்ல, ஆனால் இவர்கள் அளவிற்கு அவர்களால் அன்பு செலுத்துவது மிகக் கடினம்.
கடகம்
ஏனைய ராசிகளை விட கடக ராசி அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி என்று கூறுவார்கள். இதனால் தான் தாங்கள் பெறுவதை பல மடங்கு திருப்பி கொடுக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களை காதலில் போட்டி போட்டு வெல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இவர்களுடனான உறவு அவர்களின் துணைக்கு அளவற்ற அன்பையும் மகிழ்ச்சியும் வாரி வழங்குவதாக இருக்கும். அன்பை பொழிவதில் இவர்களை விட யாரும் இருக்க மாட்டார்கள். தங்களின் சொந்த விஷயங்களை சமாளிக்க திணறும் கூட இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அளவுக்கதிகமாக யோசித்தாலும் இவர்கள் அளவுக்கதிகமாக காதலிப்பவர்கள். இவர்கள் நேர்மையும், இரக்கமும் கொண்டவர்கள். காதலிப்பவர்கள். இவர்களின் பண்புகளை பகிர்ந்து கொள்ளும் துணை தான் இவர்களுக்கு தேவை. இவர்களின் மென்மையான இதயம் விரும்புவது நம்பிக்கைக்குரிய அன்பான ஒரு இதயத்தை.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. அடுத்தவர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்கக்கூடியவர்கள். தினம் தினம் சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போது தான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். சுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமானாலும் துணிவோடு செய்வார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத அன்பையும் வாழ்நாள் மகிழ்ச்சியையும் உங்களுக்கு அள்ளி தருவார்கள்.
தனுசு
நீங்கள் சுயலம் இன்றி அன்பை பொழிவார்கள். வாழ்க்கை துணை சந்தேகம் இன்றி அன்பை கொடுத்தால் அதை அப்படியே பல மடங்காக கொடுப்பார்கள்.இவர்களுடன் நட்பு ஒரு சுயல்நலம் அற்றதாகும். பொறுமைக்கு பிரதி விம்பமே இவர்களுக்கும். அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத அன்பை தருவார்கள்.
துலாம்
உங்களின் அதீத சமநிலை உணர்வே அவர்களை சிறந்த துணையாக இருக்க வைக்கிறது. சுறுசுறுப்பும், இரக்க குணமும் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவத்துடன் காட்டும். உறவில் இருக்கும் போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை சமமாக நடத்துவார்கள், கவனிப்பார்கள், பாராட்டுவார்கள், காதலை கொடுத்து பெறுவார்கள். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் மகிழ்ச்சியை இந்த ராசிக்காரர்கள் எளிதில் வழங்கக்கூடியவர்கள். உங்கள் காதலனோ/காதலியோ இந்த ராசிக்காரர் இருந்தால் உங்கள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும்
மகரம்
நீங்கள் காதலில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, ஆனால் வீழ்த்திவிட்டால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் குறுகிய கால உறவுகளை விரும்ப மாட்டார்கள், நீண்ட கால உறவில் இருக்கும் போது தங்கள் துணையை கண்ணின் மணி போல காதலிப்பார்கள். நீங்கள் விரும்புவது போல எந்த நிபந்தனைகளும் இன்றி உங்களை காதலிக்க இவர்களால் தான் முடியும். தான் காதலிப்பது போல தன்னுடைய துணையும் காதலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையும் சரியாகி விடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள்