நவகிரகங்கள் எந்த ராசியில் உச்சம், நீச்சம் அடையும், எந்த கிரகம் உச்சமடைந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
இந்துக்களின் வழிபாட்டுக்கு உரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். இந்த 9 நவகிரகங்கள் எந்த ராசியில் உச்சம், நீச்சம் அடையும், எந்த கிரகம் உச்சமடைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ஒவ்வொருவருக்கும் அவருக்கான ஜனன கால ஜாதக பலன் தற்போது அவருக்கு நடந்து கொண்டிருக்கின்ற தசா புத்தியைப் பொறுத்தும், தற்போது இருக்கும் கிரக நிலையைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட அடிப்படை விதியாகும். இந்த நிலையில் உங்கள் ஜாதகத்தைப் பொறுத்து ஒவ்வொரு கிரகமும் உச்சமடைந்தால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும், ஒவ்வொரு ராசிக்கும் எந்த கிரகம் உச்சம், எந்த கிரகம் நீச்சம் என்பதைப் பார்ப்போம்.
ராசி கிரகங்களின் உச்சம், நீச்சம்
மேஷம் : சூரிய பகவான் – உச்சம், சனி பகவான் – நீச்சம்
ரிஷபம் : சந்திரன் – உச்சம்
கடகம் குரு பகவான் – உச்சம், செவ்வாய் – நீச்சம்
கன்னி : புதன் – உச்சம், சுக்கிரன் -நீச்சம்
துலாம் : சனி பகவான் – உச்சம், சூரிய பகவான் -நீச்சம்
விருச்சிகம் : சந்திரன் -நீச்சம்
மகரம் : செவ்வாய் – உச்சம், குரு பகவான் -நீச்சம்
மீனம் : சுக்கிரன்- உச்சம், புதன் -நீச்சம்
சூரிய பகவான் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
நவகிரகங்களுக்கு தலைவனாக விளங்கும் சூரியன் உச்சமானால், நபர் ஒருவரின் கல்வி அறிவு சிறப்பாக அமைந்திருக்கும். ஆன்மிக சிந்தனை கொண்டு விளங்கி இருப்பதோடு, நல்ல பலவானாகவும் இருப்பார். பரோபகாரனாக இருக்கக் கூடிய இவர் தர்ம சிந்தனை கொண்டவராக திகழ்வார்.
சந்திரன் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
மனோகாரகனான சந்திரன் ஒருவருக்கு உச்சமடைந்திருந்தால் அவர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக, எந்த செயலையும் செய்து முடிக்கும் விடாமுயற்சி கொண்டவராக திகழ்வார். செல்வ செழிப்பு மிக்கவராக இருப்பார்.
செவ்வாய் கிரகம் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
நீங்கள் படைத்தளபதியாக வீரத்தோடு இருப்பார்கள். செவ்வாய் உச்சமடைவந்தால் உங்களில் பலரும் அறியக் கூடிய பிரபலமானவராக, புகழ் மிக்கவராக இருப்பார். அதோடு ஒரு செயலை செய்து முடிக்கும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கை உடையவராக, ஆக்கமும், ஊக்கமும் கொண்டவராக, ராஜ யோக வசதிகளை கொண்டவராக விளங்குவார்.
புதன் கிரகம் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
ஒருவருடைய வாழ்க்கையில் புதன் அத்திவாரமாக அமைந்தால் அவருடைய கல்விக்கு அதிபதியாக விளங்குவார்கள். கல்வி, கேள்வியில் சிறந்து விளங்குவார். பலரால் போற்றப்படக் கூடியவராகவும், கெளரவிக்கப்படுபவராகவும் இருப்பார். எப்போதும் சோர்ந்து போகாத உற்சாக மனதை உடையவராகவும், அதிர்ஷ்டம் உள்ளவராக இருப்பார்.
குரு பகவான் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
இலாபாதிபதியான குரு பகவான் உச்சம் அடைவதால் ஒருவர் கூட்டுத் தொழிலில் தலைமை தாங்குபவராக (டீம் லீட்) இருப்பார். முன் கோபம் கொண்டவராக இருந்தாலும், பலரால் மதிக்கப்படுபவராக திகழ்வார். பலவானாகவும், பிறரை ஆதரிப்பவராகவும் இருப்பார்.
சுக்கிரன் கிரகம் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
சுகாதிபதி, ஆசைக்காரகன் சுக்கிரன் உச்சமடைவதால் அவரின் ஆயுள் தீர்க்கமாகும். திறமை மிக்கவராக மட்டுமல்லாமல், தர்ம சிந்தனை உள்ளவராகவும் காணப்படுவார்கள்.
சனி பகவான் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
சமமான நீதி நாயகனான திகழும் சனி பகவான் உச்சமடைவதால் அந்த நபர் நல்ல சாமர்த்தியசாலியாகவும், செல்வ செழிப்பு உள்ளவராகவும் திகழ்வார். மனைவியை காதலிக்கும் அன்பைப் பொழியக் கூடியவராவும் கௌரவம், தீர்க்காயுள் கொண்டவராகவும். நல்ல தர்ம சிந்தனையைக் கொண்டவராக காணப்படுவார்.
ராகு கேது கிரகங்கள் உச்சமடைந்தால் கிடைக்கும் பலன்:
நற்சிந்தனைகளுடன், நிறைந்த செல்வங்களுடன் இருப்பார். நிழல் கிரகமாக இருந்தாலும் ராகு கேதுவின் உச்சமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இப்படி நவகிரகங்கள் உச்சம் பெறுவதால் பல நல்ல பலன்கள் நடக்கும்.