சூரியனின் செயல்பாடு குறைந்துள்ளதால், பூமியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!!
சூரிய ஒளி என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சின் ஒரு பகுதியாகும். இந்த உலகில் அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் அனைத்திற்கும் சூரிய ஒளி மிக முக்கியம் வாய்ந்ததாகும். சூரியனின் செயல்பாட்டை குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மனித இனத்தின் ஆதாரமாக விளங்கும் சூரியனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் ஒரு மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனின் அணுக்கருச் இணைவு வினை சங்கிலித்தொடராக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், உருவாகும் அபரிமிதமான ஆற்றல் பூமிக்கு வெப்பத்தை வழங்கி வருகிறது. தற்போது சூரியனின் செயல்பாடு குறைந்துள்ளதால், பூமியின் வெப்பநிலையும் குறைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த 200 வருடங்களுக்கு முன்னர் 1790க்கும் 1830க்கும் இடைபட்ட காலத்தில், அதேபோல் சூரியன் தனது உக்கிரத்தை குறைத்துக்கொண்டது. அப்போது, ஐரோப்பா மிகப்பெரிய காலநிலை மாற்றத்தை சந்தித்தது. லண்டனில் தேம்ஸ் நதி முதல் முறையாக முழுவதும் உறைந்து போனது. கோடை காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பஞ்சமும் ஏற்பட்டது. இதனால் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி, இந்தோனேஷியாவில் மவுண்ட் தம்போரா என்ற எரிமலையில் அதுவரை உலகம் காணாத அளவில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அதில் 70 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். சூரியனின் செயல்பாடு குறைந்ததும், அதையடுத்து பூமியில் வெப்பநிலை குறைந்ததுமே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பூமி உருவான போது பெரும் பனிக்காலம் நீடித்திருந்தது. அதன் சிறிய வடிவமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூமியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 11 வருடத்திற்கு ஒரு முறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக் கொள்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவியின் வெப்பநிலையை குறைக்கும் என்பது உண்மை என்றாலும், மற்றொரு பெரும் பனிக்காலத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த மாற்றம் இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.