7 வயது அழகிய குழந்தையை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த தாய். காரணம் இது தான்…!!
7 வயது மகளை 20வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்துகொண்ட தாய் தொடர்பில் செய்திகள் வெளியாகி உள்ளது. பெங்களூரில் தனது கணவன் மற்றும் 7 வயது குழந்தையுடன் வசித்து வந்தவர் ஜோதி மாலினி.
!Advert!
காதலித்து திருமணம் செய்த இவர்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த போதும் அதன்பின் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றைய தினமும் பங்கஜ் மற்றும் மாலினி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பங்கஜ் வீட்டைவிட்டு வெளியேறி அவரது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபத்தில் இருந்த மாலினி 20 வது மாடிக்கு மகளை அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின் தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
!Advert!
பெங்களூரில் பிரபல மாடலாக இருந்த மாலினி எந்த ஒரு விடயத்தையும் எதிர்த்து போராட கூடியவர். எப்படி தற்கொலை வரை சென்றார் என்பது மர்மமாக இருப்பதாகவும் அவரது கணவர் மீதே சந்தேகம் உள்ளதாகவும் மாலினியின் சகோதரன் தெரிவித்துள்ளார்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.