இதனால் பலமுறை பாதிக்கப் பட்டுவிட்டதால் தற்போது பழகி போய் விட்டது, ஜூலியின் சோகமான பதிவு இதோ.!!
ஜல்லிக் கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை ஜூலி. யார் கண் பட்டதோ இருந்த நல்ல பெயரை கெடுப்பதற்காகவே பிக் பாஸ் சீசன் 1ல் ஜூலி கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சில நாட்களிலேயே ஜூலிக்கு எதிர்ப்பு வந்ததுடன் ரசிகர்கள் திட்டி தீர்க்க தொடங்கினார்கள்.
அதன் பின் ஜூலி என்ன செய்தாலும் கலாய்க்க ரசிகர்கள் கூட்டம் ஒன்று இருந்தது. அது மட்டும் இன்றி தகாத வார்த்தைகளால் ஜூலியை திட்டினார்கள். இருப்பினும் அவற்றை கடந்து தனது வழியில் பயணித்த ஜூலி தற்போது திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், புகைப்பட ஷூட்கள் என பிஸியாக இருக்கிறார். அத்துடன் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.
அதில் நான் தனிமை, புறக்கணிப்பு, ஏமாற்றம் என பலவற்றால் பாதிக்கப் பட்டவள், கேலி கிண்டல் என மனமுடைந்து மீள முடியாமல் தவித்தேன், எனக்கு தெரியும் உங்கள் வலி. பலமுறை பாதிக்கப் பட்டதால் எனக்கு இது பழக்கமாகி விட்டது என கூறியுள்ளார்.!