காகம் கரைத்தல், மற்றும் எச்சமிட்டால் நன்மையா,? தீமையா.? இதோ முழுவிபரம் உங்களுக்காக…!!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைய பெரும்பாலும் செயற்படும் பறவை காகம் தான். சுய நலமாய் சிந்திக்கும் மனிதர் முன் ஒரு பருக்கை சோறு கிடைத்தாலும் கூட்டத்தைதே கூட்டிவிடும். இதனால் கவிஞர்கள் கூட ” காக்கா கூட்டத்தை பாருங்க அதற்கு கற்றுக் கொடுத்தது யாருங்க?” என காகத்தின் ஒற்றுமையை பாடிச் சென்றார்கள்.
சனீஸ்வரர், முன்னோர்கள் என காகம் வீட்டிற்கு வரும் போது அல்லது வரவழைத்து உணவு கொடுப்பது எமது வழக்கம். அதே போல் காகம் கத்தினால் விருந்தினர் வருவார்கள் என கூறுவோம்.ஆனால் காகம் பற்றியும் காகத்தின் செயற்பாடுகளால் ஏற்படும்,நன்மை தீமை பற்றி நாம் அறிந்து வைத்ததில்லை.இன்று காகம் கரையும் பலன்களும் அதன் செயற்பாடுகளால் கிடைக்கும் நன்மை தீமை பற்றியும் பார்க்கலாம்.
நாம் பயணம் செல்ல தயாராகி வீட்டை விட்டு வெளியேறும் போது காகம் வலம் இருந்து இடது பக்கம் பறந்தால் நாம் செல்லும் காரியம் வெற்றிபெற்று பண வரவை கொடுக்குமாம்.இடமிருந்து வலம் பறந்தால் தன நஷ்டம் கொடுக்குமாம்.நாம் செல்லும் போது எம்மை பார்த்தபடி காகம் எம் பின்னால் கரைந்தபடி வந்தால் அந்த பயணத்தை உடனடியாக தவிர்த்துவிட வேண்டும்.
நாம் பயணிக்கும் போது காகம் இன்னொரு காகத்திற்கு உணவு கொடுக்கும் காட்சி கண்டால் அந்த பயணம் உங்களுக்கு ஜெயமே..பூக்கள் பழங்களை வீட்டில் காகம் போட்டால் அந்த வீட்டில் ஆண் குழந்தை கிடைக்கும். கூடு கட்ட தேவைப்படும் பொருட்கள், புல், குச்சி போன்றவை போட்டால் பெண் குழந்தை பிறக்கும். இது போல காகம் கரையும் பலன்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பெற்று உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!