கீரிமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் 3 கைது…!!!
யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறை, கீரிமலை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர்களிடம் இருந்து 80 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளார்.
!Advert!
இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, விமானப் படை வீரர்களும் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் இன்று சோதனை செய்த போது, கேரள கஞ்சாவுடன் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்த சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணையை காங்கேசந்துறை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.