கடுகாய் தூள் உங்கள் வீட்டில் இருக்கா .? அப்படியானால் இனி அதிர்ஷ்டம் தான்..!!
புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகள் பகுதியில் மலச்சிக்கல் பற்றிப் பார்க்கப் போகிறோம். இது ஒரு பெரிய நோய் இல்லாத போதும் சில நோய்கள் வருவதற்கு காரணமாக அமைவது மலச்சிக்கல் தான். மூல நோய்கள், வயிறு சம்மந்தப் பட்ட பல நோய்களுக்கு இந்த மல சிக்கல் காரணமாக அமைகிறது.
மலச்சிக்கல் வர காரணமே நாம் உண்ணும் உணவுகள் தான். பேக்கரி உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலின் உஷ்ணம் அதிகரித்து மலச்சிக்கல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகிறது. முடிந்த அளவு காய் கறிகள் கீரை வகைகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வருவதை தடுக்கலாம்.
அதே போல் அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் வருவதை தடுக்கலாம். எந்த ஒரு நோயையும் உடலை நெருங்க விடாமல் வைக்கும் சக்தி தண்ணீருக்கு உள்ளது அதனால் இந்த வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடியுங்கள். மலச்சிக்கல் வந்த பின் எப்படி தடுப்பது? வாங்க பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்: கடுக்காய் பொடி. இந்த பொடி எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும். அப்புறம் சுடு தண்ணீர் ஒரு கப். முதலில் சுடு தண்ணீர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அரை கரண்டி கடுக்காய் பொடி போட்டு நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இப்போது மருந்து ரெடி இதனை இரவு சாப்பிட்டு அரை மணி நேரத்தின் பின் குடியுங்கள். அடுத்த நாள் காலையில் எந்த பிரச்சனையும் இன்றி நீங்கள் இருக்கலாம் ஒரே இரவில் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விடும் இதனை மூன்று நாட்கள் குடித்துவிட்டு நிறுத்தி விடுங்கள். அதன் பின் உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லையே இருக்காது. இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!