கடுகு எண்ணெய் ஆபத்தானது அல்ல ஆரோக்கியமானது..! எந்த எந்த நோய்களுக்கு தீர்வாகிறது தெரியுமா..!? படியுங்கள்..!!
மக்களிடம் பரவி வரும் வதந்திகளில் ஒன்று உணவுக்கு கடுகு எண்ணை பயன்படுத்த கூடாது. அப்படி பயன் படுத்தினால் மாரடைப்பு ஏற்படும் என்பதாகும். ஆனால் அண்மையில் நடத்த ஆராய்ச்சி ஒன்றில் அது வதந்தி என தெரிய் வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள் அடிபடையில் கடுகு எண்ணை சமயலுக்கு பயன் படுத்தலாம் என்றும் இதனால் ஏராளமான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடுகு எண்ணெயில் 70% மோனோ அன்சாச்சுரேட்டேட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, தவிர, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப்படும் மிகவும் பயனுள்ள கொழுப்பையும் இது கொண்டுள்ளது, இது கடுகு எண்ணெய் எல்.டி.எல் போன்ற ஆபத்தான லிப்பிட்களைக் குறைப்பதன் மூலம் இதய நோயைத் தடுக்கிறது , இரத்த நாளங்களில் தங்கும் கெட்ட கொழுப்பை இது முற்றிலும் கரைக்கிறது.
அது மட்டும் இன்றி சிறு நீரகம் சம்மந்தப் பட்ட நோய்களுக்கு கடுகு என்னை தீர்வாகிறது. இந்த வெயில் காலத்தில் சிறு நீர் கடுப்பு ஏற்படும், இதற்கு உணவில் கடுகு எண்ணை பயன்படுத்துவதால் தீர்வு கிடைக்கிறது. அத்துடன் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு உடனடியாக நிவாரணமாகிறது. அது மட்டும் இன்றி கீழ்வாதம், ஆஸ்துமா, போன்ற நோய்களுக்கும் கடுகு எண்ணெய் தீர்வாகிறது.
ஆனால் எல்லாமே அளவோடு தான் என்பது போல் இதுவும் அளவோடு பயன் படுத்துங்கள். முடிந்த வரை காய்கறிகளுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்துங்கள். காய்கறிகளுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் அதன் முழு நன்மையும் கிடைக்க கூடியதாக இருக்கும். !!