நாட்டின் காலநிலை மாற்றம்…!!!
இலங்கையில் பல மாவட்டங்கள் மாற்றும் மாகாணங்களிலும் இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றருக்கும் அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அக்கடற்பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்கடற்பகுதிகளில் சில இடங்கள் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.