உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் இருக்கும் கமலஹாசனின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ மனை வெளியிட்ட அறிக்கை.! நலம்பெற பிரார்த்திக்கும் ரசிகர்கள்.!!
உலக நாயகன் என மக்களால் கொண்டாடப்படும் படும் நடிகர் கமலஹாசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் அவரது உடல் நலம் வேண்டி அவரது ரசிகர்கள் விஷேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்,
இருமல், சளி , காய்ச்சல் இருந்ததால் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டதாக மருத்துவ அறிக்கை வெளியானது. இது தொடர்பாக கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மூச்சு விட கடினமாக இருந்தது, இருமலும் இருந்ததால் பரிசோதனை செய்தேன், கொரோனா வைர்ஸ் உறுதிப் படுத்தப் பட்டது,
தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் மருத்துவ மனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்த அறிக்கையில் கமலஹாசன் தற்போத் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக பல இழப்புகளை கண்டு விட்டோம், இனி அப்படியான இழப்புகளை தாங்கும் சக்தி இல்லை, எனவே கமலஹாசன் சீக்கிரம் வர வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கமலஹாசன் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப எங்கள் வாழ்த்துக்கள்.!!