“காமம்” இது காதலில் கலந்திருக்க வேண்டும். காதல் இல்லாத காமம் நிச்சயம் காசுக்காக கிடைக்கும் சுகத்தை போன்றது. காதல் என்பது ஒருவரை பார்த்தவுடன் சிலருக்கு வந்துவிடும், இன்னும் சிலருக்கு பழகும் போது உணரவைக்கும் , இன்னும் சிலருக்கு பார்த்து பேசி பழகிய பின் வரும் . இவை அனைத்துமே காதல் தான் இதில் குறை இல்லை.
உண்மையாக காதலிப்பவர்கள் அனைவருமே திருமணம் என்ற பந்தத்தில் இணையவே காதலிப்பார்கள், திருமணத்தின் பின் வேறென்ன குழந்தை தான். முதலில் காதலுடன் வரும் காமம் அதன் பின் காரணத்திற்காக வர ஆரம்பிக்கும். அது தான் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே காமத்தில் இருக்கும்.
அதன் பின் எந்த நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்தியர்கள் கூறுவார்கள். அதன் பின் இன்னொருவர் சொல்லும் முறையில் தன் மனைவியுடன் உறவில் இணைய வேண்டும். இது எத்தனை நரகமானது தெரியுமா.? பார்த்து பார்த்து காதலித்து எந்த காரணத்திற்காகவும் வலி.
கொடுக்க கூடாது என நினைத்து கரம் பிடிக்கும் உறவை காரணத்திற்காக காமத்தில் இணைத்துக் கொள்வதென்பது அத்தனை நரகமானது. குழந்தை எல்லோர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது தான் ஆனால் குழந்தையே வாழ்க்கை இல்லை,
மருத்துவ சிகிச்சைகளால் குழந்தையை கொடுக்க முடியும் ஆனால் பறிக்கப் பட்ட மகிழ்ச்சியை அதனால் ஏற்பட்ட ரணத்தை போக்க முடியாது. அப்படி அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்துள்ள குறும்படம் ஒன்றை தான் பார்க்கப் போகிறோம். காதலிப்பவர்கள் மற்றும் திருமணம் முடித்தவர்கள் பாருங்கள் இது உங்களுக்கானது..