காணாமற்போன சிங்கப்பூரர்கள் இருவரை தேடும் பணி மலேசியாவில் ஆரம்பம்…!!!
மலேசியாவில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் இருவரைத் தேடும் பணி தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 926 கிலோமீட்டர் வரையிலான தேடல் பணிகள் தற்போது 1,667 கடல் சதுர கிலோமீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
!Advert!
என்டாவு மற்றும் மெர்சிங் பகுதியில் காயாக் படகைப் பயன்படுத்திப் படகோட்டத்தில் ஈடுபட்ட இரு சிங்கப்பூரர்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள். தேடல் பணிகள் நான்காம் நாளாகத் தொடங்கியுள்ளது.
மலேசியக் கடல்துறைச் சட்ட அமலாக்க அமைப்பு 4 ஹெலிகாப்டர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 கப்பல்களில் 100க்கும் அதிகமான அதிகாரிகள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மெர்சிங் பகுதிக்கு அருகில் உள்ள தீவுகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகளும் மீனவர்களும் தேடல், மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர்.
!Advert!
52 வயதுடைய திரு. டான் எங் சூனும் 64 வயதுடைய திருவாட்டி புவா கியோக் டினும் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளார்கள். 13 சிங்கப்பூரர்கள் அடங்கிய குழு ஒன்று என்டாவு தீவுகளுக்கு அருகில் காயாக் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.