பாரதியை கடத்தும் வெண்பா, பாரதி கண்ணம்மா சீரியலில் இனி வரப்போகும் மாற்றங்கள் இது தானாம்.!!
பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீசன் 2 ப்ரோமோக்கள் வெளியாக தொடங்கியுள்ளது. பெரிய குடும்பத்தில் பிறந்து டாக்டராக இருக்கும் பாரதி சாதாரண குடும்பத்தில் பிறந்த சித்தியுடன் வளர்ந்த கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்கிறார். பாரதியை ஒருதலையாக காதலித்த வெண்பாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போக திட்டமிட்டு இருவரையும் பிரித்து விடுகிறார்.
கண்ணம்மாவிற்கு 2 குழந்தை பிறக்கிறது, அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் கண்ணம்மாவின் மாமியார் பாரதியிடம் கொடுக்க தனது மகளாகவே வளர்த்து வருகிறார் பாரதி. தற்போதும் இந்த கதை தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது பாகம் 2 ஆரம்பமாக உள்ள நிலையில் இதிலும் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்தே இருக்கிறார்கள், ஆனால் குழந்தைகள் வளர்ந்து விடுகின்றனர். பாரதி கண்ணம்மாவை புரிந்துகொண்ட நிலையில் வெண்பா பாரதியை இழந்து விடுவோமோ என பயப்படுகிறார்.
இதனால் பாரதியை கண்ணம்மாவிடம் நெருங்காமல் தடுக்கிறார். இனி பாரதியை மாற்ற முடியாது என தெரிந்தபின் பாரதியை கடத்துகிறார் வெண்பா. அது வரை வெண்பா நல்லவர் என நம்பி இருக்கும் பாரதிக்கு அப்போது தான் அவரது உண்மை குணம் தெரிய வருகிறது.
இந்த நிலையில் அங்கிருந்து எப்படி பாரதி தப்புகிறார், யார் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதையாம். இனி வரும் எபிசோட்கள் இப்படி தான் இருக்குமாம்.