முதலிரவில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த 17 வயதான மணப்பெண்..! பெற்றோரின் செயலால் காற்றில் பறந்த மானம்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த முதல் இரவில் கணவருக்கு ஷாக் கொடுத்த கல்லூரி மாணவி தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றது. பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் முதலாம் ஆண்டில் படித்து வருபவர் திவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) 17 வயதான இவர் கல்லூரிக்கு செல்லும் வழியில் பழக்கடை வைத்திருக்கும் சுதீஷ் என்ற இளைஞரை 6 மாதமாக காதலித்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் போடப் பட்டுள்ள ஊரடங்கால் காதலனை சந்திக்க முடியாமல் இருந்துள்ளார்.
இதனால் தொலைபேசி மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். மகள் யாரையே காதலிக்கிறார் என தெரிந்துகொண்ட பெற்றோர் 10 நாட்களுக்குள் தங்கள் உறவுக்கார இளைஞர் ஒருவரை திவ்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திவ்யா திருமணத்தை மறுத்த போதும் பெற்றோர் மிரட்டி திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களால் முதலிரவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மணமகன் மணமகளை காண அறைக்குள் சென்ற போது தொலைபேசியில் முத்தம் கொடுத்தபடி காதலனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார் திவ்யா. அதிர்ந்து போன இளைஞன் கேட்டபோது காதல் பற்றி தெரிவித்துள்ளார் திவ்யா. இதனால் புது மாப்பிள்ளை கடுப்பில் வெளியேற திரைப்பட பாணியில் காதலனை தனது அறைக்கு வரும் படி கூறியுள்ளார் திவ்யா.
சுதீஸ் சுவர் ஏறி குதித்த போது திவ்யாவின் பெற்றோரிடம் மாட்டி வாக்கிக் கட்டிக் கொண்ட நிலையில் பொலீஸாரின் தலையீட்டால் காப்பாற்றப் பட்டுள்ளார். அத்துடன் 17 வயதான திவ்யா பெற்றோர் தனக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்ததாக புகார் கொடுத்ததை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..!!