தீராத தலை வலியை நொடியில் குணப்படுத்தும் அற்புத மருத்துவம் பற்றி தெரியுமா.? படித்து பயன் பெறுங்கள்..!!
தலைவலி வந்தால் எந்த வேலை செய்ய ஆர்வம் வராது. யாரவது கதை கேட்டாலும் எரிச்சலாக இருக்கும். தலைவலி வந்தாலும் கவலைப்படாமல் அதை விரட்ட என்ன செய்யலாம்? தலைவலி என்றாலே ஆவி பிடிப்பது தான். அதற்கு துளசி, வேப்பிலை, மஞ்சள், கொய்யா இலை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி பறந்துவிடும்.
பல்வலி, தலைவலிக்கு சிறந்த நிவாரணம் கிராம்பு, கிராம்பை அரைத்து தலையில் பற்றுப் போட்டல் நின்றுவிடும்.அதிகமானோருக்கு ஒற்றைத்தலைவலி வருவது வழக்கம். அது வந்தால் தலைதூக்க பாரமாக இருக்கும். இதற்கு துளசி இலை, லவங்கம், சுக்கு போட்டு பற்றுப்போட்டால் குறைந்து விடும்.
தலைசுற்று வந்தால், நெல்லி வற்றலுடன், பச்சைபயறு 200கிராம் சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து இஞ்சிச்சாறு, தேன்கலந்து சாப்பிட வேண்டும்
தலைவலி இருப்பவர்கள் கொத்தமல்லிச் சாறை நெற்றியில் போட்டால் குறைந்துவிடும். கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும். இதற்கு எலுமிச்சை சாறும் சிறந்தது. இதை இரும்புச்சட்டியில் போட்டு காய்ச்சி நெற்றியில் தடவி வரவும்.
தலைவலிக்கு நொச்சியிவை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு, அனைத்தையும் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். சுக்கு பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவினால் குணமாகும்
மிளகை பாலுடன் அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். அகத்தி இலை சாறு எடுத்து, நெற்றியில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காயையும் குங்குமப்பூவையும் கலந்து ரோஸ் வோட்டருடன் கலந்து போட்டால் தலைவலி நீங்கும்.