குழந்தை பிறந்து 6 மாதங்களின் பின் மகனுக்கு பெயர் வைத்த நடிகர் கார்த்தி.! என்ன பெயர் தெரியுமா இதோ..,!
நடிகர் கார்த்தி மகனுக்கு 6 மாதங்களின் பின் பெயர் சூட்டும் விழா இடம்பெற்றுள்ளது. 80களில் ரசிகர்களின் நம்பிக்கை சினிமா நட்சத்திரமாக இருந்தவர் சிவகுமார். இவருக்கு இரண்டு மகன்களும் மகளும் இருப்பது நாம் அறிந்தது தான்.
சிவகுமார் தனது பிள்ளைகளுக்கு கடவுளின் பெயரையே வைத்தார். சரவணன் என சூர்யாவிற்கும், கார்த்திக் என கார்த்தி க்கும் பெயர் வைத்தார். அது மட்டும் இன்றி மகளுக்கும் ப்ருந்தா என கடவுள் சார்ந்த பெயர் வைத்தார்.
ஆனால் மூத்த மகனான சூர்யா தனது குழந்தைக்ளுக்கு ஸ்டைலான திவி, தேவ் என பெயர்கள் வைத்தார் ஆனால் கார்த்தி அதில் இருந்து வித்தியாசமாக மூத்த மகளுக்கு உமையாள் என உமாதேவியின் பெயர் வைத்தார்.
கார்த்திக்கு இரண்டாவது ஆண் குழந்தை கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் கிடைத்தது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக பெயர் சூட்டவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் தனது மகனுக்கு 6 மாதங்களின் பின் பெயர் சூட்டியுள்ளார். அதுவும் முருகனின் பெயரான “கந்தன்” என்று. இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்…
அப்பா. pic.twitter.com/O6UvID6b7X— Actor Karthi (@Karthi_Offl) March 17, 2021