கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணின் 14 வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்.! மர்ம பிரதேசங்களில் காயங்களுடன் பல நாட்கள் துடித்த சிறுவன்.! அதிர வைத்த சம்பவம்.!!
14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் ஒருவரை பாலூர் பொலீஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திக் என்கிற 26 வயது ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மேலச்சேரியை சேர்ந்தவர் கார்த்திக், கொரோனா முடக்கத்தால் பணி இன்றி வீட்டில் இருக்கும் இவர், அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக இருக்கும் கல்பனா கல்பனாவிடம் சென்று ஆன்லைன் கிளாஸ் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்பனாவின் மகனை கணித வகுப்புக்கு அனுப்பும் படியும் படித்துக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கணவரை இழந்து தனிமையில் இருந்த கல்பனா மகனை வகுப்புக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சில மாதங்களாக மகன் சோர்வாக இருந்ததால் மகனிடம் இது பற்றி கேட்டுள்ளார். கார்த்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து மிரட்டி ஒவ்வொரு நாளும் தொல்லை தருவதாகவும் தெரிவித்ததுடன்,
தனது மர்ம பிரதேசத்தில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறியதை தொடர்ந்து கடுப்பான கல்பனா கார்த்திக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திக் குளித்துக் கொண்டிருந்ததால் கார்த்திக்கின் போனை எடுத்த கல்பனா அதில் இருந்த தனது மகனின் புகைப்படங்களை தன்னுடைய போனுக்கு அனுப்பியதுடன் கார்த்திக்கின் போனில் இருந்து அனைத்து புகைப்படங்களையும் அழித்துள்ளார்.
பின் நேரடியாக மகனுடன் பாலூர் காவல் நிலையம் சென்று கார்த்திக் மீது புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிரடியாக செயற்பட்ட பொலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!