கருகலைப்பு செய்த குழந்தை கண்விழித்து அழுத ஆச்சர்யம்..! பெற்றோரின் கொடூரம்..!!
மரபணு குறைப்பாட்டுடன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்த போது குழந்தை கண்விழித்து அழுத சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த hu என்ற பெண் 8மாத கர்ப்பமாக இருந்த போது வயிற்றில் உள்ள குழந்தைக்கு மரபணு குறைப்பாடு இருப்பதாக கண்டறியப் பட்டது. இதனால் ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என வைத்தியர்கள் எச்சரித்தனர்.
இதனால் குழந்தையை கரு கலைப்பு செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர். 8 மாத குழந்தையை கருகலைப்பு செய்வது கடினம் என்றாலும் குழந்தை மற்றும் தாயாரின் நலன் கருதி கருகலைப்பு செய்யப் பட்டது. அதன் பின் தாய் தன் குழந்தையின் சடலத்தை இறுதியாக பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு அமைய குழந்தை பெற்றோரிடம் காட்டப் பட்டது.
தாயார் குழந்தையின் சடலத்தை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென கண்விழித்த குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன தாய் குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இதனால் குறித்த தாய் கருகலைப்பு சரியான முறையில் செய்யவில்லை என கூறி வழக்கு தாக்கல் செய்தார்.
குழந்தையை வளர்ப்பது கடினம் என்றும் அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என கொடுக்கப் பட்ட மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டதுடன் வைத்திய சாலை சரியான முறையில் கருகலைப்பு செய்தும் குழந்தை உயிரோடு இருப்பது குழந்தையின் அதிர்ஷ்டம் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சரியானதே என தெரிவித்துள்ளதுடன் வைத்தியசாலையின் தவறு ஏதும் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கியதுடன் மருத்துவமனை கருகலைப்புக்கு பெற்றோர் செலவு செய்த தொகையை பெற்றோருக்கு கொடுக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது..!