வேகமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் கருஞ்சீரகம்..! இப்படி சாப்பிடுங்கள்..!!
தற்போது நோய் தடுப்புக்காக பலரும் பல மருந்துகளை பயன் படுத்து வந்தாலும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் படி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் தங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது நிச்சயம் வைரஸ் தொற்றுக்களில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் கூறி வரும் நிலையில் சித்த மருத்துவர்கள் சில சித்த மருத்துவங்களை மக்களுக்கு கூறி வருகின்றனர். அதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருஞ்சீரக எண்ணை அரை கரண்டி, தேன் அரை கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி வேகமாக அதிகரிக்கும் என கூறப் படுகின்ற அதே நேரம் கருஞ்சீரக எண்ணெய் இல்லாதவர்கள் சிறிது கருஞ்சீரகம் எடுத்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிடும் படி கூறியுள்ளனர்.
இவற்றை செய்ய முடியாவிட்டால் தினமும் 7 கருஞ்சீரகம் சாப்பிட்டு ஒரு கப் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கச் செல்லும் படி குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக கருஞ்சீரகம் மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் தடுக்கும் மருந்து என கூறப்பட்டு வரும் நிலையில் சித்த வைத்தியர்கள் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளனர்…!!