அமெரிக்காவில் பெண்கள் தமது துணையால் கர்ப்பமடையும் நெருக்குதலுக்கு ஆளாகும் சோதனை..!!
அமெரிக்காவில் எட்டில் ஒரு பதின்ம வயதுப் பெண்கள் தமது துணையால் கர்ப்பமடையும் நெருக்குதலுக்கு ஆளாக்குவதாக கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களுக்கும் அது போன்ற நெருக்குதல் அளிக்கப்படுவதாகக் கருத்தாய்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கு 14 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட 550 பெண்களுக்கு கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டார். அந்தப் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடும் ஆண்கள் அந்த பெண்களுக்கே தெரியாத வகையில் அவர்களைக் கருவுற முயற்சி மேற்கொள்வதாகக் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பெண்கள் கர்ப்பம் அடையாம இருக்க கர்ப்பத் தடை மாத்திரைகளை மறைத்து வைத்தல் அவை ஆணுறையில் துளையிடுதல் போன்றவற்றின் மூலம் பதின்ம வயதுப் பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பம் தரிக்கச் செய்வதாகக் கருத்தாய்வில் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற செயல்கள் துன்புறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்தது.
இது போன்ற சில சம்பவங்களில், கருவுற விரும்பாத பெண்கள் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப் படுகின்றார்கள். கருவுற விரும்பாத நிலையில், உறவைத் துண்டித்துக்கொள்ளப் போவதாக ஆண்கள் மிரட்டுகின்றனர் என்று ஆய்வில் கலந்து கொண்ட இளம்பெண்கள் தெரிவித்தனர்.