மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது…!!
மட்டக்களப்பு வவுணதீவு பொன்னாங்கன்னிச்சேனை ஆற்றுப் பகுதியில் சட்டத்திற்கு எதிராக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 45 லீற்றர் கசிப்பும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கும் பொருட்கள் போன்றன வவுணதீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
!Advert!
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று அதிகாலை வவுணதீவு பொலிஸாரும் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவும் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
!Advert!
இதன் போது கைதானவர்கள் கன்னங்குடா, ஆயித்தியமலை, பாவக்கொடிச்சேனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், அதோடு இவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.