அந்தரங்க விடயங்களை செரினுடன் பகிருந்துகொண்ட வனிதா..! எதற்காக இந்த சண்டை !?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்கள் என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க இன்று மகிழ்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. வீட்டிற்குள் வந்த வனிதா தர்சனின் வெளியேற்றத்திற்கு யார் காரணம் என்பதை பட்டும் படாமலும் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் சேரன் அவர்கள் பேசிய போது பிரச்சனை ஆரம்பமானது. அதன் பின் அனைத்தையும் வனிதா கூறினார்.
தர்சனின் வாக்குகள் செரினால் பிரிந்து போனதால் தான் தர்சன் வெளியேறினார் என வனிதா போட்டுடைத்தார். இதனை சாக்ஷி,சேரன், கஸ்தூரி ஆகியோர் எதிர்த்தனர். பொதுவாக வனிதா பேசினால் வெடிக்கும் சண்டை இன்று வனிதாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த சேரனால் ஆரம்பமானது தான் கொடுமை.
வீட்டிற்குள் வரும் போது அனைவருமே மகிழ்ச்சியாக தான் வந்தார்கள், சாக்ஷியும் லொஸ்லியாவும் கட்டி பிடித்துக் கொண்டதுடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். சாக்ஷி லொஸ்லியாவிற்கு பரிசும் கொடுத்தார். இப்படி மகிழ்ச்சியாக ஆரம்பமான பிக் பாஸ் இறுதியில் கண்ணீரானது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் வனிதா பற்றிய கேவலமான ரகசியங்கள் எனக்கு தெரியும் ஒன்றை சரி சொன்னால் அவளவு தான் என செரின் கூற கஸ்தூரி மற்றும் சாக்ஷி இருவரும் அது போன்ற ஒரு கேவலமான விடயத்தை செய்துவிடாதே என செரினுக்கு 6️அறிவுரை வழங்கினார்கள். அப்படி என்ன ரகசியம் வனிதா செரினிடம் கூறி இருக்கிறார் எனபது இன்னும் சில நாட்களில் வெளியே வந்துவிடும்..!