ரூல்ஸை மீறி பிக் பாஸ் உண்மைகளை போட்டுடைக்கும் நடிகை கஸ்தூரி..! பிக் பாஸ் வீட்டில் நடப்பது இது தானாம்…!
16 போட்டியாளர்களுடன் மகிழ்ச்சியாக ஆரம்பித்த பிக் பாஸ் இன்று 7 பேருடன் அனல் பறக்கும் போட்டியாக செல்கிறது. இதில் நாளை மறு நாள் ஒருவர் வெளியேறியே தீருவார் என்ற நிலையில் போட்டியாளர்கள் விடாமல் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் பேசியது எதுவும் வரவில்லை என கடுப்பில் இருக்கின்றனர். அவர்களில் கஸ்தூரியும் ஒருவர். சமூக அக்கறை கொண்ட கஸ்தூரி வீட்டிற்குள் அமைதியாக இருந்ததாக கூறி வருகின்றனர்.
ஆனால் கஸ்தூரியோ நான் பல விடயங்கள் பேசினேன் ஆனால் எதுவும் வெளியே வரவில்லை. பிக் பாஸ் வீட்டில் நாம் பேசுவது வெளியே வராது, அவர்கள் நினைப்பது தான் வரும். பிக் பாஸ் வீட்டில் எடிட்டரின் கையில் தான் எல்லாம் இருக்கிறது,
எல்லோரும், அடிமை வாழ்க்கை என்பதை கேள்வி பட்டிருக்கிறேன் முதல் முறை அனுபவித்தேன். இதை கூட நான் சொல்ல கூடாது என்பது ரூல்ஸ் ஆனால் சொல்லாமல் இருக்க முடியல. பிக் பாஸ் வீட்டில் இருப்பது சாக்கடை அருகில் இருப்பதும் ஒன்று என கூறியுள்ளார்..!