திருமணமான பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்…!!!!
தமிழகத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி சீதாராணி இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக சீதாராணி ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடும் ஹமீது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சீதாரணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் சுரேஷ் பல தடவை எச்சரித்தும் கேட்கததால், மனைவி சீதாராணியை முறைப்படி விவாகரத்து செய்தார்.
!Advert!
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் ஹமீதுக்கு துபாயில் வேலை கிடைத்த நிலையில் அவர் அங்கு சென்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக துபாயில் வேலை செய்து விட்டு கடந்த வருடம் சொந்த ஊருக்கு திரும்பிய ஹமீது மீண்டும் சீதாராணியுடனான காதலை புதுப்பிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அதற்கு சீதாராணி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சீதாராணியின் வீட்டிற்கு சென்ற ஹமீது, அவரை தனது ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கோபமடைந்த ஹமீது சீதாராணியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கத்தி குத்தில் பலத்த காயமடைந்த சீதாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்தூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
!Advert!
இதற்கு இடையில் ஹமீது அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். ஹமீது மீட்டு அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். காதலியை குத்திக் கொலை செய்த விரக்தியில் விஷம் அருந்திய அவர் சிறிது நேரத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை தீவிரமாக ஆந்திரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.