கவினின் காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்த லொஸ்லியா..! இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு.!!
இன்றைய பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா எப்படி நடந்துகொள்ளப் போகிறார், கவினுடன் மீண்டும் காதலை தொடர்வாரா முற்றுப் புள்ளி வைப்பாரா என்ற கேள்வி பலரிடம் இருந்தது, நேற்றைய தினம் வீட்டிற்குள் வந்த தந்தை இவற்றை விட்டுவிடு என கூறியதால் காதலை முடித்துக் கொண்டால் அதன் பின் என்ன நடக்கும் இருவரும் என்ன செய்வார்கள் என தெரிந்து கொள்ள போட்டியாளர்களும் ரசிகர்களும் காத்திருந்தனர்.
இன்றைய நிகழ்ச்சியில் வழமை போல் பேச ஆரம்பித்த லொஸ்லியா இங்கு இன்றுடன் காதலை முடித்துக் கொள்வோம் என கூறினார். நாம் இப்போது இங்கு இருப்பது நிஜம் இல்லை, வெளியே இருப்பது தான் நிஜம், அதனால் முதல் கேம் விளையாடுவோம் வெளியே சென்றபின் பேசலாம்,
நீ சந்தோசமாக இருந்தால் மட்டுமே நான் சந்தோசமாக இருப்பேன் நீ விளையாடுவாய் தானே என கேட்கிறார். அதற்கு அமைதியாக இருக்கும் கவினிடம் சொல்லு என கேட்க கவினும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் வீட்டிற்குள் இனி கவின் லொஸ்லியா காதல் இருக்காது வெளியே வந்தபின் இரு வீட்டார் சம்மதித்தால் நடக்கலாம்..பொறுத்திருந்து பார்ப்போம்..!