கன்னியாஸ்திரி அபாயா கொலைக்கு 28 வருடங்களின் பின் நீதி வாங்கி கொடுத்த திருடன்.! கோடி கோடியாய் பணம், வீடு, வேலை எதற்கும் மடியாத கெத்து,! இவன் தான் மனிதன்..!!
28 ஆண்டுகளின் பின் அரசியல், பண பலம், ஆள் பலம் போன்றவற்றை மீறி கன்னியாஸ்திரி அபாயாவின் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது. கன்னியாஸ்திரி அபாயா 1992ம் ஆண்டு கேரளாவில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. கிணற்றில் இருந்து இவரது சடலம் மீட்கப் பட்டதால் பொலீஸாரும் தற்கொலை என்று வழக்கை முடித்தனர். ஆனால் இது கொலை என்று மீண்டும் மீண்டும் கன்னியாஸ்திரி அபாயாவின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
முதல் முறை பொலீஸார் விசாரணையில் தோற்றனர், இரண்டாம் முறை சிபிஐ விசாரணையில் தோன்றது, மூன்றாம் முறை முக்கிய அதிகாரிகள் பலரது அதிரடி செயலால் கொலை என்ற ரீதியில் விசாரணை இடம்பெற்றது, இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராடியது ஒரு சாதாரண திருடன். இவரது பெயர் அடக்கா ராஜு. இவர் கொட்டை பாக்கு, தேங்காய், என கையில் கிடைத்ததெல்லாம் திருடுபவர்.
இவர் கொட்டை பாக்கு திருடுவதால் மலையாளத்தில் அடக்கா என்றால் கொட்டை பாக்கு ராஜு, என்று பெயர் வைத்தனர். கன்னியாஸ்திரி அபாயா கொலை வழக்கில் கொலையாளி தோமஸ் ராஜுவின் கண்களில் எப்படி சிக்கினார் .? சம்பவ தினதன்று வழமை போல் திருடுவதற்கு ராஜூ சென்றுள்ளார். அபயா கொலை நடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோட்டயத்தில் அபயா தங்கியிருந்த St Pius மடத்தின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கியில் இருந்து அலுமினிய ராடுகளை அடக்கா ராஜூ கழற்றிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென மாடியின் அருகில் லைட் வெளிச்சம் தெரிந்துள்ளது, அதனால் ராஜு மறைந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்தவர்கள் பாதிரியார் தோமஸ் மற்றும் பாதிரியார் தோஸ். வெளிச்சத்தில் தோமஸின் முகத்தை பார்த்துவிட்ட ராஜூ அவர்கள் பேசுவதை கேட்டுள்ளார். அபாயா, மர்டர் போன்ற வார்த்தை மட்டுமே புரிந்துள்ளது. அதனை பெரிதாக கண்டுகொள்ளாத ராஜு திருடிய பொருட்களுடன் சென்றுவிட்டார்.
இவர் திருடும் பொருட்கள் சமீர் என்பவரிடம் தான் விற்பதுண்டு. வழமை போல் விற்றுவிட்டு இருந்துவிட்டார். பின் செய்திகளில் நடந்த விடயங்களும் கன்னியாஸ்திரி அபாயா தற்கொலை என்றதும் தெரியவர பொலீஸுக்கு சென்று இரண்டு பாதிரியார்களை சம்பவ இடத்தில் கண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் நம்பாத பொலீஸார் ராஜூவுடன் சமீரின் கடைக்கு சென்று அங்கு ராஜூ திருடிய பொருட்களை எடுத்ததுடன் ராஜூ உண்மை சொல்வதை ஏற்றுக் கொண்டனர்.
உண்மை சொன்னால் வாழ முடியாதே, ராஜுக்கு தொல்லைக்கு மேல் தொல்லை. இவரை கைது செய்து 6 மாதம் விசாரணை. பணம், அரசியல் என பலரது மிரட்டல். அது மட்டும் இன்றி, வீடு பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் எதற்கும் அசையாமல் கல்லாக நின்றார் ராஜூ. 28 வருடங்களின் பின் உண்மைக்கு வெற்றி கிடைத்தது. ஏழ்மையிலும் ராஜுவின் உண்மை பிரமிக்க வைத்ததாக நீதிபதிகள் பாராட்டினார்கள்.
கேரளாவை கலக்கும் ராஜுவிடம் இது பற்றி கேட்ட போது அந்த அம்மா கொலை செய்ய பட்ட அடுத்த நாளே திருட்டு தொழிலை கை விட்டுடன். இப்ப தென்னை மரம் ஏறுவது, விறகு வெட்டி கொடுப்பது, தோட்ட வேலைகள் செய்து கொடுப்பது என்று வாழ்கிறேன், இன்னும் அதே குடிசை தான், எனக்கு இந்த வாழ்க்கை போதும் சார்.என கூறியுள்ளார்.
ஏன் பணம், வீடு என கிடைத்த போது உதறினீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு ஒரு பொண்ணு இருக்கா சார். கன்னியாஸ்திரியா இருந்தாலும் அவரும் எனக்கு பொண்ணு மாதிரி தான். அவங்க அப்பா என்ன செய்வாரோ அத தான் நானும் செய்தேன் என்கிறார். நீ மனிதன் இல்லப்பா, கடவுள் என்று எண்ணத் தோன்றுகிறது..!!