வித்தியாசமான முறையில் இளம் மனைவியை கொலை செய்த கணவன்..! அதிர்ச்சியில் பொலீஸார். !
கடந்த சில நாட்களாக பொலீஸாரை குழப்பிய கேரளா பெண்ணின் மரணத்திற்காக உண்மை காரணம் தற்போது வெளியாகி உள்ளது. கேரளாவில் கொல்லம் பகுதியில் வசித்து வந்த சூரஜ் என்பவரின் மனைவியான உத்ரா என்கிற 25 வயது இளம் பெண் பாம்பு கடித்து மரணமடைந்திருந்தார். மே 7ம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலீஸாருக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது.
காரணம் பெப்ரவரி ஏற்கனவே பெப்ரவரி மாதமும் இவரை பாம்பு கடித்து மருத்துவ சிகிச்சையினால் உயிர் தப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் சூராஜ் மீது பொலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில் சில உண்மைகள் வெளியாகி உள்ளது,
இதன் அடிப்படையில் சூரஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கைது செய்யப் பட்ட நிலையில் மனைவியை கொல்ல பாம்பினை பயன் படுத்தியதை சூரஜ் ஒத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பாம்பு வாங்கி மனைவியின் அறையில் வைத்த நிலையில் பாம்பு கடித்த நிலையில் பாம்பு கடித்தது என கதறியதால் யாருக்கும் சந்தேகம் வரகூடாது என காப்பாற்றிய சூரஜ்,
இரண்டாம் முறை செய்த முயற்சியில் மனைவியை கொலை செய்து விட்டார். இது தொடர்பாக தெரிய வருவதாவது ஏராளமான சொத்து நகைகளுடன் உத்ராவை திருமணம் செய்துகொண்ட சூரஜ் அவற்றை அபகரித்துக் கொள்ள நினைத்ததுடன் வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப் படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீஸார் நடத்தி வருகின்றனர்..!!