“பயப்படுகிறாயா” என கேட்டு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப் பட்ட சிறுமி.! மனதை பதறவைத்த சம்பவம்.!!
மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் மக்கள் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் இடம் பெரும் இந்த போராட்டத்தில் இது வரை 270 பேர் இராணுவத்தினரால் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துள்ள இராணுவத்தினர் கற்பழிப்பு, கொலை என அனைத்திலும் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டதின் போது கொடூரமான முறையில் கொல்லப் பட்ட 7வயது சிறுமியின் தந்தை தனது மகள் கொல்லப் பட்ட அந்த கொடூரமான நிமிடங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்துகொண்டபோது: எனது மகள் Khin Myo நான் மற்றும் எனது மனைவி மகள் அனைவரும் வீட்டில் இருந்தோம். திடீரென வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டின் மேல் பகுதியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இதனால் பயந்து போன என் மகள் கத்தி அழுதால். அறை வாசலில் நின்ற அவள் என்னை நோக்கி ஓடி வந்தால் ஆனால் இராணுவத்தினர் என் மகளின் காலில் சுட்டனர். என் மகன் தங்கையை தூக்க முயன்ற போது அவனை ஒருவர் எட்டி உதைத்தார். எங்களை மகளிடம் நெருங்க விடவில்லை. பின்னர் ஒருவர் மகளிடம் பயந்துவிட்டாயா என கூறி அவளது உடலில் சுட்டுவிட்டான், என் மகள் துடித்தாள்.
அப்போது மகளை தூக்கி அணைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினேன். ஆனால் அவள் வெளியே செல்லும் முன்பே இறந்து விட்டாள். அப்போது என் மகனை மியன்மார் ராணுவத்தினர் அடித்து இழுத்துச் சென்றனர். மகளை அடக்கம் செய்துவிட்டோம், மகன் எங்கே என்று தெரியவில்லை, என கதறியுள்ளார். இதன் போது இறந்த சிறுமியின் சகோதரி கூறுகையில் எங்கள் வீட்டை உடைத்து வீட்டிற்குள் வரும் போது எங்களை தந்தை வீட்டைவிட்டு பின் வழியாக போக சொன்னார்.
அப்பா தங்கை, அண்ணா, அம்மா தான் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் ஓடி வந்துவிட்டோம் அந்த சம்பவத்தை நினைக்கும் போது நடுங்குகிறது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு இது வரை மியன்மார் இராணுவத்தினரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.!!