பார்ப்பவர்களை நொடியில் கவரும் இயற்கை அழகை பெற வேண்டுமா.? அட இத மட்டும் செய்து பாருங்கள்..உங்கள் அழகை பார்த்து நீங்களே ஷாக் ஆகுவீங்க..!!
வெயில் படுவதால் முகச்சுருக்கம் ஏற்படும். நாம் கீரிம்களை போடுவதால் ஒவ்வாமை ஏற்படும். செலவு குறையாமல் வீட்டிலேயே பளிச் அழகாக மாற இப்படி செய்யலாம்…முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வந்தால் தினமும் தேனை முகத்தில் பூசி குளிரந்த நீரால் கழுவினால் மறைந்துவிடும்.கரும்புள்ளிகள் மறைவதற்கு ஜாதிக்காய் தூளுடன் சந்தன தூளை சமமாக எடுத்து, முகத்தில் பூசவும்.
20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறையும்.கண்களையும் முகத்தையும் புத்துணர்ச்சியாக இருக்க வெண்தாமரை இதழ்களை விளக்கெண்ணெயுடன் சேர்த்து அரைத்து, காற்று போகாத டப்பாவில் சேர்த்து ஃபிரிட்ஜில் வைக்கவும். இதை தினமும் கண்களுக்கு பூசினால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
முகம் பளிச் என்று இருக்க கிர்ணிப்பழத்துண்டு ஒன்றை கையால் மசித்து முகத்தில் பூச வேண்டும்.
முகம் டல்லாக இருப்பவர்கள் இதை செய்யவும் முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், பன்னீர் சேர்த்து முகத்தில் ஃபாக் மாதரி போட்டு 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் சரியாகி விடும்.
முகத்துக்கு புரோட்டினை அளித்து முகத்தை சிவப்பாக வைத்திருக்க உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் உப்பு, வினிகர் சேர்த்து அதை முகத்தில் பூசவேண்டும். இது முகத்தை பளிச் என மாற்றும்.
2பாதாம்பருப்பு, தேன், பால் கலந்து அரைத்து முகத்தில்,பூசி காயவைத்து பின் கழுவவேண்டும். இது அழகை இன்னும் கூட்டும்.சருமம் வறட்சியாக உள்ளவர்கள் வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் சேர்த்து மசித்து பூசி ஊறவைத்து கழுவினால் சருமம் வழுவழுப்பாக இருக்கும்.நுங்கின் சதைப்பகுதியுடன், ரோஸ் வாட்டர், முல்தானிமெட்டி கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.