இல்லத்தரசிகளுக்கு உபயோகமான கிச்சன் டிப்ஸ்!
சமையலறையில் சமைக்கின்ற பெண்கள் கைவசம் பல வித்தைகளை செய்யத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் சிக்கமாகவும் சீக்கிரமாகவும் சுவையாகவும் சமைக்கமுடியும். அதற்கு சமையலறையில் பயன்படுத்தவேண்டிய சில ட்ரிக்ஸ் தெரிந்திருந்தால் போதும். அந்த ட்ரிக்ஸ் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
தேங்காய் அதிகமாக மிஞ்சிவிட்டால் அதில் உப்பைத் தடவி வைப்பார்கள். அதற்குப் பதில் தேங்காய்த் துண்டுகளாக வெட்டி குளிரூட்டியில் வைத்துக் கொள்ளலாம். தேவையானபோது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து பாலாக எடுத்துக் கொள்ளலாம்.
சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
பொரித்த எண்ணெயை மீளவும் பயன்படுத்தும்போது அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். முடிந்தவரை தேவையான அளவு எண்ணெயை மாத்திரம் பயன்படுத்தவும். எஞ்சிவிட்டால் அதை மூன்று நாட்களுக்குள் பயன்படுத்திமுடிக்கப் பாருங்கள்.
அடுப்பில் பா்த்திரத்தை வைத்துவிட்டு மறந்துபோய் விட்டீர்களா? பாத்திரங்கள் அடியில் கருகி அடிப்பிடித்துவிட்டதா? இதற்கு தக்காளி சோஸை ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவேண்டும். இதை இரவு முழுவதும் ஊறவைத்து விட்டால் போதும்.அடிப்பிடித்த கறுப்பை காணாமல் போய்விடச் செய்யலாம்.
தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
மக்கில் உள்ள கறைகளை நீக்குவதற்கு டுத்பேஸ்டை பயன்படுத்தலாம். ஒரு பழைய பிரஸ்ஸில் டூத் பேஸ்டை எடுத்துக் கொள்ளுங்கள். மக்கின் அனைத்து பாகங்களிலும் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டுப் பின் கழுவிக் கொள்ளுங்கள்.
நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”