“மாதவிடாய் நாளில் கூட என்னை விடவில்லை” பாலியல் தொல்லையால் பாதிக்கப் பட்ட சட்டக் கல்லூரி மாணவி கண்ணீர்..!
கடந்த 20ம் திகதி உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்தா கைது செய்யப் பட்டார். இதற்கான காரணம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி படிப்பிற்கு உதவி கோரி சின்மயானந்தா அவர்களிடம் சென்ற போது குறித்த மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை படுத்தியமை, மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதாக மாணவி கொடுத்த புகார் ஆகும்..!
இந்த விடயம் குறித்து புகார் கொடுத்த சட்டக் கல்லூரி மாணவி குறிப்பிடுகையில் எனது படிப்பு தொடர்பாக சின்மயானந்தா அவர்களை சந்திக்க சென்றேன். சரி நீ போ நாங்கள் அழைக்கும் போது வா என்றார்கள். மீண்டும் அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு வந்தேன். மூன்று நாட்கள் கழித்து சின்மயானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது என்னை வரும் படி கூற நானும் சென்றேன்.
அனைவர் முன்னிலையிலும் என்னை மகள் என்றழைத்தார். ஆனால் அவரது அறைக்கு சென்றபின் மாறிவிட்டார். என்னிடம் செல்போன் ஒன்றை கொடுத்து பார்க்கும் படி கூறினார். அதை பார்த்த நான் அதிர்ந்துபோனேன். அதில் நான் உடை மாற்றுவது தொடங்கி குளிப்பது வரை அனைத்தும் இருந்தது. நான் அழ ஆரம்பித்தேன் ஆனால் அவரொ இவை அனைத்தையும் இணையத்தில் போட்டுவிடுவேன், என மிரட்டினார்.
அதன் பின் நான் சொல்வதை நீ கேட்டே ஆகவேண்டும். நாளை நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூறி அனுப்பினார். அடுத்த நாள் காலை அவரது பாதுகாப்பாளர்கள் என் வீட்டிற்கு வந்து என்னை கூப்பிட்டார்கள் எனக்கு வேறு வழி தெரியவில்லை. வீடியோ வெளியானால் எனது படிப்பு, எங்கள் மானம் , போய்விடும். எல்லோரும் அவமானப் பட நேரிடும் என பயந்து சென்றேன்.
அங்கு நிர்வாணமாக அறையில் இருந்த சின்மயானந்தா அவரை ஆயில் மசாஜ் செய்யச் சொன்னார். முடியாது என்ற போது வீடியோ என சிரித்தார். ஒவ்வொரு நாளும் காலையில் அவரது பாதுகாவலர்கள் என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவருக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டு தான் நான் கல்லூரி செல்ல வேண்டும்.
எனக்கு மாதவிடாய் நாட்களில் வலி அதிகம் இருக்கும் அதனால் அந்த நாட்களில் என்னால் வர முடியவில்லை என கூறினேன் ஆனால் அவர் விடவில்லை கட்டாயம் வந்தே தீர வேண்டும் என கூறுவார். ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. இவரை உத்தமர் என்று கூறுகின்றவர்கள் முன் இவரது சுயரூபத்தை நிரூபிக்க நினைத்தேன்.
அவரிடமே செலவுக்கு பணம் வேண்டுமென வாங்கி கேமராவுடன் இருக்கும் மூக்கு கண்ணாடி வாங்கினேன். நான் கண்ணாடி பாவிப்பதால் யாரும் சந்தேகப் படவில்லை. மூக்கு கண்ணாடியினால் நடந்ததை வீடியோ எடுத்து ஆதாரத்துடன் வழக்கு தொடர்ந்துவிட்டேன். சட்டம் சரியான தண்டனை கொடுக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கைது செய்யப் பட்ட சின்மயானந்தா உடல் நிலை சரி இல்லை என லக்னோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..!!