ஹெலி விபத்தில் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரருக்கும் அவரது மகளுக்கும் நடந்த சோகம்!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ், கலாபசாஸ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த அமெரிக்க பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான கோப் பிரயன்ட் மற்றும் அவரது மகள் கியன்னா உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
வானிலை சீரின்மை காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் விழுந்த சிறிது நேரத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த ஏனையோர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்தான் கோப் பிரயன்ட் (வயது-41). உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான இவர், ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கங்களையும் ஐந்து தடவைகள் என்பிஏ சம்பியன்ஷிப் பட்டத்தைவும் வென்றுள்ளார். இவர் லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.