கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டித்து கொலை….!!
இந்தியாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சரியாக இரவு 9.40 மணியளவில் மணிகண்டன் தனது நண்பர்களான கணேசன் மற்றும் சரவணனுடன் அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த வேளையில் இரு சக்கர வாகனத்தில் வாளுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் திடீரென மணிகண்டனின் காலில் ஓங்கி வெட்டியுள்ளனர். ஒரு கால் துண்டாடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஓட முடியாமல் திணறிய மணிகண்டனின் கழுத்தில் மற்றொரு நபர் வாளால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவருடைய தலை துண்டாக விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மணிகண்டனின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் இந்த விசாரணையில் பக்கத்து கிராமத்தினர் மணிகண்டனை சாதி பெயரை சொல்லி கேலி செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அதோடு மணிகண்டன் சாதி பிரச்சனையால் சிலரை தாக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.